Posts

Showing posts from January, 2021

சாக்கிய நாயனார் (Sakiya Nayanar)

Image
சாக்கிய நாயனார் (Sakiya Nayanar) அன்பே சிவம், சிவமே அன்பு என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த சாக்கிய நாயனார் கதை. இறைவனுக்கு உள்ளன்போடு எதை சமர்பித்தாலும், இறைவன் அதை அன்போடு ஏற்றுக்கொள்வர் என்பதை சாக்கிய நாயனார் வரலாறு புலப்படுத்துகிறது. சாக்கியர் காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற ஊரில் வாழ்ந்தவர். இவர் பௌத்த மதத்தை தழுவியவர். சாக்கியம் என்றால் பௌத்தம் என்றும்  பொருள் உண்டு , இதனால் தான் சேக்கிழார் பெருமான் இவரை சாக்கிய நாயனார் என்று பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார். இவர் இளமைக் காலத்திலேயே இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவராகவும், ஞானத்தை பற்றிய தேடலில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என தேடத் தொடங்கி பல சமய நூல்களையும் கற்க தொடங்கினர். அதன் ஒரு கட்டமாக சைவ சமய நூல்களை படித்தார். அதில் ஒரு தெளிவைக்கண்டார். பிறவிப்பெருங்கடலைக் கடக்க சிவனே வழி என்று உணர்ந்தார். சாக்கிய கோலத்தில் இருந்ததாலும், அங்கு சாக்கியர்கள் அதிகம் வசித்த காரணத்தினாலும், ஈஸ்வர வழிபாட்டை யாரும் அறியா வண்ணம் மறைமுகமாக செய்து வந்தா...

புகழ்பெற்ற ஓவியர் ரோபர்ட் டங்கெனின் ஓவியங்கள் (Robert Duncan's Paintings)

Image
புகழ்பெற்ற ஓவியர் ரோபர்ட் டங்கெனின் ஓவியங்கள்  (Robert Duncan's Paintings)     ரோபர்ட் டங்கென் என்பவர் ஒரு அமெரிக்க ஓவியர் ஆவர். இவர் 1952ஆம் ஆண்டு சால்ட் லேக் சிட்டியில் பிறந்து, பத்து பிழைகளை கொண்ட பெரும் குடும்பத்தில் வளர்ந்தவர்.இவர் தனது சிறு பராயத்திலேயே  கால்நடை வளர்ப்பு, மற்றும் கிராமிய வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டவர். இவர் தனது ஐந்து வயதிலிருந்தே ஓவியத்தில் நாட்டம் கொண்டவர், இவரது ஆர்வத்தை கண்டு இவரது பாட்டி இவரது பதினோராவது வயதில் வர்ணம் தீட்டும் தொகுப்பொன்றை பரிசளித்து, ஓவியக்கலை வகுப்பிலும் சேர்த்தார். இவர் உட்டா பல்கலைக்கழகத்தில் ஓவியக்கலை பயின்றார். ரோபர்ட் அருங்காட்சியகங்களை பார்வையிடவும், அவர் போற்றும் கலைஞர்களை பற்றி படிப்பதட்காகவும் தனது பயணத்தை விரிவு படுத்தினர். இவர் அமெரிக்காவின் கௌ போய் கலைஞராக 29ஆவது வயதில் தெரிவுசெய்யப்பட்டார் மற்றும் பீனிக்ஸ் கலை அருங்காட்சியகத்தின் வருடாந்த கண்காட்சியில் இரண்டு வெள்ளி பதக்கங்களையும்  வென்றார். இவர் வாழ்க்கை விவசாயம், கிராமியம், மலைகள், இயற்கை , பெரும் குடும்பம் முறையை ஒட்டியதால், இவரின்...