அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன்
அக்பரும் பீர்பலும்: முட்டாள் திருடன் ஒரு சமயம், மன்னர் அக்பரின் இராஜ்ஜியத்தில் இருந்த வணிகர் ஒருவரின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. பொருட்களை பறி கொடுத்த அந்தவணிகர் நீதிமன்றத்தின் உதவியை நாட மன்னர் அக்பரிடம் சென்றார். மன்னர் திருடனை கண்டுபிடிக்கும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்தார் . அந்த வணிகர் தன்னிடம் பணி புரியும் பணியாளன் ஒருவன் தான் இதை செய்திருக்க வேண்டும் என சந்தேகித்தார், அதனை பீர்பாலிடமும் கூறினார். அந்த வணிகரிடம் பணி புரியும் பணியாட்களை வரிசையாக நிற்க சொன்னார் பீர்பால். அவர்களிடம் திருட்டு போன சம்பவத்தை பற்றி விசாரித்த போது பணியாட்கள் எல்லோரும் தாம் அதை செய்யவில்லை என மறுத்தனர். பின்னர் பீர்பால் பணியாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே அளவான குச்சியை வழங்கி "இந்த திருடனை கண்டுபிடிக்கும் அதிசய குச்சி, யார் கொள்ளையடித்தாரோ அவரின் குச்சி நாளைக்குள் இரண்டு அங்குலங்கள் அதிகரிக்கும்." என கூறினார். மறுநாள் பீர்பால் பணியாட்கள் அனைவரின் குச்சிகளையும் பரிசோதித்து பார்த்த போது ஒருவனுடைய குச்சி மட்டும் இரண்டு அங்குலங்கள் குறைவாக இருந்தது. "அந்த உயரம் ...